வெள்ளி, 17 ஜூன், 2011

எம் இனமே எமக்காக ஒரு நிமிடம் ஒதுக்கமாட்டாயா????

தமிழா ஓ சிதறியோடிய ஏதிலித்தமிழா!!! உன் விழிகளை கொஞ்சம் சனல் நாங்கு 
தொலைக்காட்சி நோக்கி திருப்படா -அதில் ஒளிபரப்பாகிக்கொண்டிருப்பது திரைப்படம் 
அல்ல உன் இனத்தின் கொலைப்படம்-அதில் சிங்களத்தின் கொலைமுகம்தெரிகிறதா 
பார்

சிதறிய உடல்களும் சிந்திய உதிரமும் உனை தூற்றுவது கேட்கிறதா??இன்னும் 
என்னசெய்யப்போகிறாய்  என் இனமே !! என் உறவுகளின் உதிரத்தை உற்றுப்பார் 
என் தமிழ் சாதியே !!நாதியற்ற நாய்களைப்போல் செத்துக்கிடக்கும் என் உறவுகளைப்பார் 
ஏனடா இந்த அவல நிலை இது என் இனத்தின் சாபமா ??அல்லது நாம் செய்த பாவமா???

ஓ,,,,,,,,,, இளைய சமூகமே இளவுவீட்டில் நின்றுகொண்டு ஏன்வேடிக்கை பார்க்கின்றாய் 
கதறி அழு -உன் சத்தம் செவிடர்கள்காதுகளில் ரத்தம் வரச்செய்யட்டும் -களத்தில் கிடக்கும் 
உன் குலமாந்தர் உடல்களைப்பார் -என்ன தெரிகிறது?? ஆடையற்ற அவள்உடலெங்கும் 
காயங்கள்இருக்கிறதே அது என்ன என்று தெரிகிறதா??அது என்ன என்று தெரிகிறதா என் 
இனமே!! 

சிங்கள ஓநாயின் நகக்கீறலும் அவன் விசப்பற்களின் அடையாளமும் -பத்துமாதம் சுமந்து
பத்திரமாய் பாதுகாத்து பொத்திப்பொத்தி வளர்த எம் அன்னையர் உடலெல்லாம் பற்றி 
எரிகிறதே ,பாழ்பட்ட உலகம் பயங்கரவாதம் என்று இன்றைக்கு சொல்கிறதே ஏனென்று
 கேட்பதற்கு ஏனடா ஏன் தயக்கம்

சிங்களவன் செல்லடித்தால் சல்லடைபிடித்த சில வல்லரசுகள் அதை நியாம் என்று சொல்கிறது 
அவன் எறிந்த கற்களை எடுத்து நாம் எறிந்தால் அதை பயங்கரவாதம் என்று சொல்கிறது-
பாவப்பட்ட  உலகில் காயப்பட்ட என் உறவுகள் இன்றைக்கு அரைந்தபடிஅலைகிறது எவனடா 
அதைக்கண்டான்

சிங்களன் தேசத்தில் பட்டாசு வெடித்தாலும் புலி பாறாங்கல் விழுந்தாலும் புலி ஏனடா ஏன் 
நாங்கள் புலியானோம் என்று எவன் வந்து எமைக்கேட்டான் -என் நிலத்தை கொள்ளையடித்தான்
என் தாயின் உடல்சிதைத்தான் என் தந்தையினை சிறைப்பிடித்தான்என் அக்காளை கற்பழித்தான்
இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கச்செல்லும் மடையர்களிடம் கேளடா உன் காலில்
கல் ஒன்று பட்டால் அதை எடுத்து முத்தமிடுவாயா என்று


புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லலும் இந்த உலகிடம் கேளடா அப்படி என்ன பயங்கரத்தை
அவர்கள் செய்தார்  என்று -எந்தச்சிங்களத்தியையாவது கற்பழித்து கொலைசெய்தாரா?? -ஒரு
சிங்களவனின்குடிசைகள் மீதாவது குண்டுபோட்டாரா  -?காவிஉடை தரித்தவனும் இன்றைக்கு 
கற்பழிக்கின்றான் -புலி வரிதரித்த எவனுமே ஏன் அதைச்செய்வதில்லை ஏனடா தமின் ஆணுறு
-ப்பை அறுத்தா எறிந்துவிட்டான்-ஏன் ஒருவன் கூட காமத்தை தேடவில்லை அவர்களை வளத்த 
வளர்ப்பு அப்படி என் தலைவன்கொடுத்த போதனைகள் மகத்தானவை அத்தகயதலைவனையும் -
பயங்கரவாதி என்று பச்சை குத்திவிட்டது இந்த உலகம்

தமிழா உனக்னான உரிமையினை கேட்டால் அது பயங்கரவாதம் என்றால் நீ பயங்கரவாதியாகவே 
-இரு முட்டிபோட்டு நிற்பதிலும் நின்றுகொண்டே சாவது மேல் இன்னும் என்ன தயக்கம் ஏனாட 
நக்கித்திரியும் நாய்கூட தன்வழிக்கு யாரும் தடை சொன்னால் பாய்துகடிக்கிறதே நாயைவிடக்கீழாக 
உன் இனத்தை சிங்களவன் சிதைக்கிறானே ஏன் என்று கேட்பதற்கு எழுந்துவர என்ன தடை

அடிமைப்பட மறுத்துவிட்டு அகதியாகிப்போனவனே உலகெல்லாம் உன் வீடாக உன் வீடுகள்
சுடுகாடாகிப்போனதடா-எஞ்சிஉள்ள உன் தங்கையரை காமவெறிச்சிங்களன் அன்றாடம் தின்னுகின்றான்
புலப்பெயர் தேசமெங்கும் மின்விளக்குகள் நடுவினிலே நீ நித்திரை கொள்கின்றாய் மின்னுகின்ற 
பவளம்போல் பாதைகளில் நீ நடந்து திரிகின்றாய்-பாவிகள் கரங்களால் என் இனம் அழிகிறது

உனக்காக களத்தில் காவல்நின்ற வேங்கைகள் இன்று கையிழந்து கால் இழந்து ஊர்ந்தபடி அலைகிறது
நீ நின்மதியாய் தூக்கம்கொள்ள எல்லையில் நின்று காவல்செய்த காவல்தெய்வங்கள் இன்று கருகிய
உலல்களுடன் உன் கண் முன்னே தெரிகிறனர் -கைகட்டி வேடிக்கை பார்கும் கோழைசாதிகளே! என்ன
துனிவிருந்தால் இந்தச்சிங்களக்கொலைவெறியர் எம் அக்கா தங்கையரை கொன்றுவிட்டு அதை கானெளி
-யாய் பதிந்திருப்பார்

பூகேலஅரசியலில் உன் தேசம் புழுதிபடிந்து கிடக்கிறது  ஈழத்தின் பெரும்புயலே நீ வேகம்கொண்டால்
இந்தப்புழுதிகள் கலைந்தோடி உன் தேசம் மலர்ந்துவிடும்-உன் இனத்தைன் விடுதலையில் கொடும்
தலைகள் கொய்யப்படும் -உனக்கு நீதிகிடைத்தால் அநீதிகள் தீயினில் வெந்துவிடும்-நெந்துகொண்டி
-ருக்கும் நெஞ்சங்களை சந்தித்து கரம்கொடுத்து ஒன்றுபடு -ஓய்ந்துவிட்ட கால்களின் பயணங்கள்
தொடரட்டும் உன் மண்ணில் நிலைகொண்ட காலகள் எல்லாம் இனி ஓடத்தெடங்கட்டும்-ஒன்றுபடு என்
இனமே ஒற்றுபடு என் இனமே!
video

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

“என்ன செய்யலாம் இதற்காக?”

 

நூலில் அடங்கியவை



    1. ஈழ இனப்படுகொலை துயரங்களை காட்டும் 371 புகைப்படங்கள்.


    2. 4 முக்கிய அட்டவணைகள்

    (i) ஈழத்தமிழ் இனப்படுகொலைகள்ள் 1956 -2009 .
    (ii) தோல்வி அடைந்த  ஓப்பந்தங்களும் , பேச்சு வார்த்தைகளும்,
    (iii) ஈழத்தமிழரின் அறவழிப் போராட்டங்கள்.
    (iv) இலங்கைத்தீவில் தமிழரின் பூர்வீகம்.

    3. ஈழம் குறித்து உலகப்பிரமுகர்களின் முக்கிய கருத்துக்கள்.


    4.நீதி கேட்கும் 80  மனித நேய கூற்றுக்கள்


    5. மனித உரிமை போராளிகளின் அணிந்துரைகள்

    (i).V.R.கிருஷ்ணய்யர்,  
    முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி.

    (ii). டாக்டர். எலன் சாண்டர் ,
    மனித நேய மருத்துவர் அமெரிக்கா.

    (iii)  விராஜ் மென்டிஸ்,
    தலைவர், சரவதேச மனித உரிமைகள் கழகம் ஜெர்மனி,

    (iv)  சிறிதுங்க ஜெயசூர்யா,
    பொதுச் செயலாளர் ஐக்கிய சோசலிசக் கட்சி இலங்கை.

    6. மொத்தம் 216  பக்கங்கள்.


    7. 12 " * 8 .5 அளவுகளில்,
    தமிழ்,ஆங்கிலம்,பிரெஞ்சு மொழிகளில்

    video
     

    புதன், 5 ஜனவரி, 2011

    9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.

    வருகின்ற சனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலை வாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

    video


    செவ்வாய், 4 ஜனவரி, 2011

    மனச்சோர்வால் வாடும் அரும்புகள்+வேலையை தேடி போகாதீர்கள்...உருவாக்குங்கள்!'

    குழந்தைகளுக்கு ஏன் மனச்சோர்வு ஏற்படுகிறது? நம் குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அப்படியெனில் அவர்களை மீட்பது எப்படி? இதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது.

    மனச்சோர்வுக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். தாழ்வு மனப்பான்மை, அன்பற்ற சூழல், கண்டிப்பான பெற்றோர், நண்பர்கள் இல்லாமை, நண்பர்கள் அல்லது சக மாணவமாணவியருடன் ஏற்படும் பூசல்கள், சகோதர சகோதரிகள் மத்தியில் உண்டாகும் போட்டி, பொறாமை, பெற்றோர் செய்யும் ஒப்பீடுகள், ஆசிரியர்கள் காட்டும் பாரபட்சம், பாடச்சுமைகள் என எத்தனை எத்தனையோ.


    கவனிக்க வேண்டிய அறிகுறிகள்:
    அளவுக்கதிகமான ஒட்டுதல்: சில குழந்தைகள் வளர்ந்தபின்னும் தாய் தந்தையை ஒட்டிக்கொள்ளுவார்கள். தனியாக எங்கும் செல்ல பயப்படுவார்கள். நெருங்கிய உறவினர்களின் மரணம், புதிய பள்ளிகளில் சேர்க்கப்படுதல், வீட்டில் இன்னொரு குழந்தையின் வரவு தனது சலுகைகளைப்பறித்துவிடுமோ என்ற அச்சம் இவையெல்லாம், சில குழந்தைகளிடம் மன அழுத்தத்தைத் தூண்டலாம். உங்களையே குழந்தை சுற்றிச் சுற்றி வருதல், பிரிவு குறித்த அச்சம் இவையெல்லாம் இருக்குமானால், அது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

    தனிமையை நாடுதல்: பிறருடன் சேர்ந்து விளையாடிக் களிக்க வேண்டிய குழந்தைகள், சலிப்புற்றுத் தனிமையில் அமருதல், எதிலும் ஆர்வமின்றி இருத்தல் ஆகியவை இருக்குமானால், பெற்றோர் அவர்களிடம் மனம் விட்டுப்பேசுவது அவசியம். அவர்கள் பேச மறுத்தால், குழந்தைகளுக்கான மனநல மருத்துவரை அணுகுவதும் நல்லதே!

    கெட்ட பழக்கங்கள் உருவாதல்: பொய் சொல்லுதல், திருடுதல், பிறரை அடித்தல், எளிதில் கோபப்பட்டு கைக்குக் கிடைப்பதை வீசி எறிதல் போன்ற பழக்கங்கள் புதிதாக உருவாகின்றனவா? இதுவும் மன அழுத்தத்தின் விளைவாகவே இருக்கலாம்.




    தன்னைத் தானே தாழ்த்திக்கொள்ளுதல்: தான் மக்கு, கெட்ட குழந்தை, அசடு, தனக்குப் படிப்பு வராது என்றெல்லாம் தன்னைப் பற்றியே ஒரு குழந்தை அடிக்கடி மட்டமாகச் சொல்லிக்கொள்கிறதா? பெரியவர்கள் எவ்வளக்கெவ்வளவு தாழ்வு மனப்பான்மை உண்டாகும்பொழுது அதை மறைக்க உயர்வாகப் பேசிக்கொள்வார்களோ அதற்கு எதிரானது குழந்தைகளின் செயல். இக்குழந்தைகள் ஏதோ காரணத்தால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்பட்டிருக்கலாம். அவர்களை அடிக்கடி புகழ்ந்துபேசி அவர்கள் மீது நம்பிக்கை இருப்பதைக் காட்டவேண்டியது பெற்றோர் கடமை.

    படுக்கையை நனைத்தல்: வளர்ந்த குழந்தைகள், படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிட்டபின், திடீரெனத் திரும்பவும் அப்பழக்கத்திற்கு ஆட்பட்டால், அதற்கு மன அழுத்தமே காரணமாக இருக்க இயலும். இதுவும் கண்காணிக்கப்பட வேண்டியது.

    கெட்ட கனவுகளால் பாதிக்கப்படுதல்: எப்போதாவது தூக்கத்தில் கெட்ட கனவுகள் கண்டு பயந்து அலறுதல் எல்லாருக்கும் உள்ளதுதான். ஆனால், அடிக்கடி பாதிப்பு உண்டாகுமானால், நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை அணுகுவது நல்லது.


    மதிப்பெண் குறைதல், பள்ளி செல்ல மறுத்தல்: நன்றாகப் படித்துக்கொண்டிருக்கும் குழந்தை திடீரெனப் பள்ளி செல்ல மறுத்தல், பள்ளித் தேர்வுகளில் மதிப்பெண் குறைதல், தேர்வுகளில் தோல்வியுறுதல் இவையும் குழந்தைகளின் மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள்தான். உடன் படித்த நண்பன் வேறு ஊருக்கு/பள்ளிக்கு மாற்றலாகிச் செல்லுதல், புதிய ஆசிரியரின் வருகை, ஆசிரியர் மீது ஏற்படும் வெறுப்பு இவை ஏதேனும் காரணமாக இருக்கலாம். குழந்தை பள்ளி செல்ல மறுத்தால், திட்டி, மிரட்டி இழுத்துச் சென்று பள்ளியில் விடாமல், அன்பாக விசாரித்தல் நல்லது. பள்ளியில் ஏதாவது புதிய மாற்றங்கள் உண்டாகியுள்ளனவா என அறிவதும். அடிக்கடி பள்ளிக்குச் சென்று குழந்தையின் வகுப்பாசிரியரிடம் குழந்தை நடந்துகொள்ளும் விதம், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள உறவு இவை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவை தவிர காரணமற்ற கோபம் மற்றும் அழுகை, எப்பொழுது பார்த்தாலும் பசி என்று சொல்லுவது அல்லது பசியே இல்லாமல் இருப்பது, அதிகக் களைப்பு, வலுவின்மை, தூக்கமின்மை அல்லது அதிகத் தூக்கம் முதலியவையும் மனச்சோர்வின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புண்டு.

    மனச்சோர்வின் சில வகைகள்: அதிக மனச்சோர்வு அல்லது பெருமளவு மனச்சோர்வு (Major Depression), டிஸ்தைமியா (Dysthymia), இருதுருவக் குலைவு மனநிலை (Bipolar Disorder), காலமாற்றக் கோளாறுகள் (Seasonal Disorder) முதலியவை குழந்தைகளைப் பொதுவாகத் தாக்கும் மனநோய்கள்.

    அதிக அல்லது பெருமளவு மனச்சோர்வு என்பது குழந்தைகள் எந்நேரமும் வருத்தமாக அல்லது குற்ற உணர்ச்சியாலோ தாழ்வு மனப்பான்மையாலோ பீடிக்கப்ப்ட்டு இருப்பது. 'நான் நன்றாகத்தானே இருக்கிறேன்' என்று இவர்கள் சொன்னால் கூட, இவர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தே இருப்பதை நாம் உணர முடியும். இந்த சோகமான மனோபாவம் இவர்கள் தூக்கம் மற்றும் உணவருந்துதலையும் பாதிக்கும். டிஸ்தைமியா பாதிப்பு உடைய குழந்தைகளிடம் குறைந்த அளவு மனச்சோர்வு இருப்பினும், இது வருடக்கணக்கில் நீடிக்கும். இது அன்றாட நடவடிக்கைகளைப் பாதிக்காதவரை, பெற்றோர் இதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்கள். ஆனாலும், டிஸ்தைமியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பத்து சதவீதத்திற்கும் மேற்பட்டோர், காலப்போக்கில் பெருமளவு மனச்சோர்விற்கு ஆளாகி விடுவதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். எனவே உங்கள் குழந்தைக்கு அடிக்கடி மனநிலை மாறுபாடு (Mood Swing) ஏற்படுமானால், அக்குழந்தை மீது கவனம் செலுத்துவது நல்லது.

    இருதுருவக்குலைவு என்பது குழந்தை ஒருபுறம் வருத்தம், சோகம், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி இவற்றிற்கு ஆட்பட்டிருந்து, மறுபுறம் அதிகக் கோபம், தாறுமாறாக எரிச்சலுற்று வெடித்தல் போன்றவற்றைக் கொண்டிருப்பது ஆகும். இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் ஆவர். இக்கோளாறு முதிர்ச்சியடைகையில் எந்தச் செயலிலும் கவனமின்மை, எதிர்மறையாகவே செயல்படுதல், எப்பொழுதும் பதட்டம், எதிலும் ஒரு வித வெறித்தனமான (mania) விருப்பு அல்லது வெறுப்பினைக் காட்டுதல் ஆகியவையாக உருவெடுக்கிறது.

    குழந்தைகள் மனச்சோர்வுக்கு ஆளாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? ஆளாகிவிட்டால் எந்த விதமான சிகிச்சையினை மேற்கொள்ளுதல் வேண்டும் என்பன குறித்து இப்பகுதியில் தொடர்ந்து காணலாம்.

    வேலையை தேடி போகாதீர்கள்...உருவாக்குங்கள்!'

     வெல்டராகத் தன் வாழ்வைத் தொடங்கி, இன்று, தனியார் பால் விற்பனை நிலையம் வைத்து உயர்ந்துள்ள ராஜேந்திர பாபு: மதுரையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவன். என் அப்பா வெல்டராக இருந்தார். நான் வீட்டிற்கு கடைசிப் பிள்ளை. காலையில் பள்ளிக்கு போய், மாலையில், என் அப்பா வேலை பார்க்கும் இடத்திற்கு போவேன்.அங்கு, என் அப்பா வேலை செய்யும் கஷ்டத்தைப் பார்க்கும் போது, ஒரு நிறுவனத்தை உருவாக்கி, அதில், என் அப்பாவை உட்கார வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற வெறி உண்டானது. பிளஸ் 2 முடித்ததும், பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் எடுத்துப் படித்தேன். படித்து முடித்த பின், பல நாட்கள் வேலைக்கு முயன்றேன்; எதுவும் அமையவில்லை.வேலைக்காக காத்திருப்பதை விட, அப்பா செய்த வெல்டிங் வேலையை செய்யலாம் என்று தோன்றியது. பின், என் பெற்றோரின் உதவியுடன், தனியாக ஒரு வெல்டிங் ஒர்க் ஷாப்பை
     உருவாக்கினேன். அப்போது, ஆவின் பால் டிப்போவிற்கு தேவையான பொருட்களை எல்லாம் வெல்டிங் செய்து கொடுக்கக்கூடிய ஒப்பந்தம் கிடைத்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலாக, ஆவின் டிப்போவிற்கு தேவையான பொருட்களைச் செய்து கொடுத்தேன்.என் தொழில் முறையைப் பார்த்து, டெய்ரி மில்க் போன்ற நிறுவனங்கள், அவர்களுக்குத் தேவையான பொருட்களைச் செய்து கொடுக்கச் சொல்லி ஒப்பந்தம் போட்டன. பல வருடங்கள், பல நிறுவனங்களுக்குப் பொருட்களைச் செய்து தரும்போது, அதில் ஒரு சில பொருட்கள் தேங்கிவிடும். அந்தப் பொருட்களைக் கொண்டு, பால் பண்ணை ஆரம்பிக்கும் படி என் அம்மா ஆலோசனை கூறினார்.எஸ்.என்.பி., டெய்ரி மில்க் என்ற நிறுவனத்தை உருவாக்கினேன். நான் ஆரம்பித்த இந்த நிறுவனம் தான், தென் மாவட்டத்திலேயே முதன் முதலாகத் தொடங்கப்பட்ட தனியார் பால் விற்பனை நிறுவனம். இன்று வரை வெற்றிகரமாக செயல்படுகிறது.






    ஞாயிறு, 2 ஜனவரி, 2011

    ஒரு பிள்ளையின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள் +கோவை புறநகரில் இனி இரவு 12 மணிவரை உணவகங்கள் இயங்க அனுமதி, நாம் தமிழர் கட்சியினரின் முயற்சி வெற்றி.


    ஒரு பிள்ளையின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்
    எனவே எம் அன்பிற்குரிய உறவுகளே !

    எங்களின் எதிர்கால சந்ததியாகிய மாணவர்களின் எதிர்காலத்திற்காய் அனைவரும் கரங்கொடுப்போம். நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிள்ளையை எமது அமைப்பிடம் இருந்து பொறுப்பெடுத்து இடைத்தரகரின்றி நேரடியாகவே அந்த பிள்ளைகளுடன் தொடர்பு கொண்டு அவர்களின் கல்விக்காக மாதம் £30 குறைந்தது ஒரு வருடத்துக்கேனும் நேரடியாகவே வழங்கி அழிந்துபோய் மீண்டு எழுவதற்காகத் துடிக்கின்ற எமது சந்ததிக்கு உடனடியாகக் கரம் கொடுங்கள். நாட்டிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களே பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை சேகரித்து உங்களுக்கு வழங்குகின்றனர்
    புலம் பெயர் நாடுகளிலுள்ள நல்ல உள்ளம் கொண்ட பலர் தாமாக முன்வந்து எம்மிடம் இருக்கும் விபரங்களைப் பெற்று நேரடியாக அங்குள்ள பிள்ளைகளுடன் தொடர்பு கொண்டு தாங்களே நேரடியாக உதவி செய்து வருகின்றனர். இங்கு எந்த இடைத்தரகர்களும் இல்லையென்பதால் நீங்களே பிள்ளைகளுடன் நேரடியாக தொடர்புகொண்டு அவர்களுக்கு உதவி செய்ய முடியும்.


    இதனால் நம்பிக்கையும் அனுப்பப்படுகின்ற உதவி சரியாகச் சென்றடைவதை உறுதிப்படுத்தக்கூடிய நிலைமையும் பேணப்படும். எம்மிடம் தொடர்பு கொள்வதன் மூலம் உடனடியாகவே ஒரு பிள்ளையின் விபரத்தைப்பெற்று அவர்களுக்கு நீங்கள் நேரடியாகவே உதவி செய்ய முடியும்.


    " விரைந்து கரங்கோடுப்போம் எதிர்கால வாழ்விற்கு வழி காட்டுவோம் " நன்றி.


    l தொடர்புகளுக்கு : இணையதள முகவரி : www.itsonetwork.org மின்னஞ்சல் முகவரி : itsonetwork@gmail.com தொலைபேசி இலக்கங்கள , 00447921227920               00447921227920           


    ps click here -read more and see photo in

    கோவை புறநகரில் இனி இரவு 12 மணிவரை உணவகங்கள் இயங்க அனுமதி
    நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட முயற்சியால் கோவை நகரில் இனி இரவு 12 மணிவரைக்கும் உணவகங்கள் இயங்கும் என கோவை மாவட்ட காவல்துறை ஆணையாளர் அறிவித்துள்ளார்.கடந்த 12 ஆண்டுகளாக கோவை நகரில் உணவகங்கள் அனைத்தும் இரவு 10 மணிவரை மட்டுமே இயங்கி வந்தது.இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் கடந்த 27.12.2010 மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஒருங்கினைப்பாளர் ஆனந்தராசு அவர்கள் தலைமையில் உணவகங்களை இரவு12 மணிவரைக்கும் திறக்க அனுமத்திக்கவேண்டும் என மனு கொடுத்தனர் இதனையடுத்து மாவட்ட காவல்துறை ஆணையாளர் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது இனி உணவகங்கள் இரவு 12 மணிவரைக்கும் இயங்கலாம் என தெரிவித்தார். பொதுமக்களின் பிரச்சனையை முன்னெடுத்த நாம் தமிழர் கட்சியினரை கோவை நகர மக்கள் பெரிதும் பாராட்டினர்


    
    

    வியாழன், 30 டிசம்பர், 2010

    இதற்கு யார்தான் காரணம்?


    பொட்டம்மானால் அனுப்பட்ட புலானய்வு துறை முக்கிய போராளி கைது புலனாய்வு துறை பொறுப்பாளார் பொட்டு அம்மானால் பதுளையில் இருந்து இயக்கிவிக்க பட்ட முக்கிய போராளி ஒருவரை இரகசிய புலனாய்வு துறையினர் பதுளையில் வைத்து கைது செய்துள்ளனர் .இவர் பிரபல முக்கியஸ்தர் ஒருவரை குறி வைத்து தாக்குதல் நடத்தும் நோக்குடன் பொட்டு அம்மானால் அனுப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது . பொட்டு அம்மான் இறந்து விட்டார் என்ற நிலை மாறி தற்போது அவரே புலிகளின் வலையமைப்பை வழி நடத்தி வருவது உறுதி படுத்த பட்ட நிலையில் ஐரோப்பாவில் எங்கும் தமிழ் மக்களிடத்தில் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது . கைது செய்ய பட்ட நபருக்கும் பொட்டு அம்மனுக்கும் நேரடி தொடர்பு இருந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .




    வெங்காயத்தின் விலை குறையவில்லை; தக்காளி, பூண்டு விலை குறையவில்லை; சர்க்கரை விலை குறையவில்லை; அரிசி, பருப்பு, கோதுமை விலையும் குறையவில்லை; விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையும் குறையவில்லை!
    ஆமாம், 2008-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், 2009-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தேசிய குற்றப் பிரிவு வழக்குப் பதிவேட்டின்படி தற்கொலைக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள விவரம் இது. 2009-ம் ஆண்டு, பல்வேறு காரணங்களுக்காக 17,368 பண்ணை விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது அதற்கு முந்தைய ஆண்டைக்காட்டிலும் 1172 சாவுகள் அதிகம். வேளாண் விளைபொருள்களின் விலை சந்தையில் குறையவில்லை. ஆனால் தற்கொலையும் குறையாது என்றால் எங்கே குறை? இதற்கு யார்தான் காரணம்?
    இந்தியா வளரும் நாடாக இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. இங்குள்ள மிகப்பெரும் நுகர்வுச் சந்தைக்காக அமெரிக்க அதிபர் வந்து உடன்படிக்கையில் கையெழுத்திடுகிறார். சீன அதிபர் வருகிறார். ரஷிய அதிபர் வருகிறார். எல்லோரும் இந்தியாவுக்கு வந்து, இந்தியாவுடன் உறவை மேம்படுத்திக் கொள்கிறார்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்கள். ஆனால், வங்கிக் கடனுக்குக் கையெழுத்திட்ட விவசாயி மட்டும், இந்த நாட்டில் செத்துக் கொண்டிருக்கிறான். என்ன வேதனையான வேடிக்கை!
    இந்தத் தற்கொலைப் பட்டியலில் 5 மாநிலங்கள் “பெருமை’ சேர்த்துக் கொண்டுள்ளன. அவை: மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்கள். இங்கே முந்தைய ஆண்டைக்காட்டிலும் சராசரியாக 1000 தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது.
    இந்த மாநிலங்களை விட்டுத் தள்ளுவோம். தமிழ்நாட்டின் நிலைமை என்ன? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகள் தற்கொலை அதிகம் இல்லை என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் வருத்தம் தரும் புள்ளிவிவரம் என்னவெனில், இந்தத் தற்கொலைகள் இப்போது இரட்டிப்பாகியுள்ளன. 2008-ம் ஆண்டில் 512 ஆக இருந்த விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, 2009-ம் ஆண்டில் 1060 ஆக உயர்ந்துள்ளது.
    தமிழ்நாட்டில் விவசாயத் தற்கொலைகள் குறைவு என்று தமிழக அரசு வேண்டுமானால் பெருமை பேசலாம். ஆனால், நிலைமை நன்றாக இல்லை என்பதைத்தான் இப்போதைய இரட்டிப்புச் சாவு எண்ணிக்கை வெளிப்படையாகச் சொல்கிறது.
    விவசாயிகள் எண்ணிக்கை கிராமங்களில் குறைந்து வருகிறது. நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்கிறார்கள். இந்நிலையில், இருக்கும் விவசாயிகளும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றால் தமிழகத்தில் யார்தான் விவசாயத்தில் ஈடுபடப்போகிறார்கள்?
    கரும்பு விளைவித்தால் விவசாயிக்கு லாபமில்லை. ஆனால் சர்க்கரை ஆலைகள் கோடிகோடியாய் லாபம் அடைகின்றன.
    நெல் மூட்டைக்கு கூடுதல் விலை இல்லை. ஆனால் அரிசி மண்டிகள் இப்போதே ஜனவரி மாதத்தில் அரிசிக்கு என்ன விலை என்பதைத் தீர்மானித்து விட்டன. பொன்னி அரிசி தற்போதுரூ.800-க்கு (25 கிலோ) விற்கப்படுவது பொங்கலுக்குப் பிறகுரூ. 1000 என்று தீர்மானித்து, வாடிக்கையாளர்களிடம் இப்போதே வாங்கிக் கொண்டால் பிழைத்தீர்கள் என்று சொல்லவும் செய்கிறார்கள். ஆனால் விவசாயி, மத்தியக் குழுவின் வருகைக்காகவும், அரசின் அறிக்கைக்காகவும் காத்திருக்கிறான். அரசு இழப்பீடு வழங்கினாலும், லஞ்சம் போக அவன் கைக்குக் கிடைப்பது சொற்பமாகத்தான் இருக்கும்.
    சிறுஉற்பத்தியான காய்கறிகளில்கூட விவசாயி லாபம் காண முடிவதில்லை. விலையை அவனால் நிர்ணயிக்கவே முடியாது. யாரோ விலையைத் தீர்மானிக்கிறார்கள். வெங்காயம் விலை உயர்ந்தால், கொத்தமல்லி, கறிவேப்பிலைகூட விலை கூடுகிறது. இந்த விலைஉயர்வில் 10 விழுக்காடுகூட விவசாயிக்குப் போய்ச் சேர்வதில்லை. இப்படித்தான் வேளாண் விளைபொருள்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.
    இன்றைய தமிழகத்தின் மிகப்பெரும் சவால் பாசன வசதியுடன்கூடிய விளைநிலங்களை அரசியல் பினாமிகள் வாங்கிப் போட்டு விவசாயம் செய்யாமல் தரிசாக வைத்திருக்கிறார்கள். இன்னொருபுறம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்குப் போதுமான மின்சாரம் கிடைப்பதில்லை. ஜெனரேட்டர் வைத்து நீர்இறைக்கும் சக்தி அனைவருக்கும் கிடையாது. பிறகு எப்படி விவசாயம் நடக்கும்?
    புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், விஜயகுமார் என்கிற விவசாயி, தனக்குத் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச டி.வி.யை அமைச்சரிடமே மேடையில் திருப்பிக் கொடுத்துவிட்டு, “விவசாயிக்கு டி.வி. வேண்டாம், குறைந்தது ஒரு மாவட்டத்துக்காவது மின்தடையில்லாமல் செய்யுங்கள்” என்று கூறியிருக்கிறார். குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச டி.வி. வழங்குவதைக் காட்டிலும் முக்கியத்துவம் தரவேண்டிய பிரச்னைகள், குறிப்பாக விவசாயப் பிரச்னைகள் இருப்பதன் வெளிப்பாடுதான் இந்தச் சம்பவம். அரசு இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
    மற்றொரு மிகப்பெரும் தவறைத் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. தற்போது குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளில் 75 விழுக்காடு பயனாளிகள் கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள்தான். இத்திட்டத்துக்கு இரும்புக் கம்பி, சிமென்டை வழங்கிவிட்டு, அதற்கான தொகை போக மீதித் தொகையை வீடுகட்டியவருக்கும் தருகிறார்கள். ஆனால் இந்தத் தொகையில் வீடு கட்டவே முடியாது என்பதுதான் எதார்த்த நிலைமை.
    அரசு குறிப்பிட்டிருக்கும் அளவின்படியே வீடு கட்டினாலும், குறைந்ததுரூ. 1.25 லட்சம் செலவாகிறது. அரசு தரும்ரூ. 75,000க்கு ஆசைப்பட்டு, மீதித்தொகையை கிராமப்புறங்களில் கடன் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பலருக்கு இது சக்திக்கு மீறிய செலவு. அடுத்த இரு ஆண்டுகளில் இந்த வீட்டுக் கடன், வட்டியோடு பூதாகரமாக நிற்கப்போகிறது.
    ஏற்கெனவே நஷ்டத்தில் சிக்கியிருக்கும் ஏழை விவசாயிக்கு இந்த வீட்டுக்கடன் பெரும் பிரச்னையாக உருவெடுக்கும்போது, இவர்களைக் காப்பாற்றப் போவது யார்?
    “இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகள்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு’ என்று காகிதத்தில் எழுதிப்பிடித்துக் கொள்ளத்தான் வேண்டும். ஏட்டுச் சுரைக்காய்…!




    புதன், 29 டிசம்பர், 2010

    யாழில் அரச எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொல்லும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்! அதிர்ச்சித் தகவல் அம்பலம்




    “விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ளவேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள  ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்லவேண்டும். "
    - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்
    வன்னிப் போரின் இறுதி யுத்தத்தில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்து விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் சிலரை மீண்டும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அதேவேளை யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதவர்களை சுட்டுக்கொல்வதற்குமுரிய நடவடிக்கைகளை இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவின் விசேட பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
    யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு மாத காலத்திற்குள்ளே இரண்டு கொலைச்சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று சங்காலையில் ஆலயப்பிரதம குருவும் அவரது இரு புதல்வர்களும் துப்பாக்கியால் சுடப்பட்டு 5 நாட்களின் பின்னர் ஆலய பிரதம குரு வைத்தியசாலையில் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டது.
    மற்றது கடந்த 26ம் திகதி உரும்பிராய் பகுதியில் வைத்து வலிகாமம் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஆயுததாரிகளால் தனது வீட்டில் கொடுமையாக சுடப்பட்டு துடிதுடித்து இறந்தார். இவ்விரு சம்பவங்களிலும் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வந்ததாகவும் அதன்போதே இருவரும் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
    ஆனால் உண்மை அதுவன்று ஆலயபிரதம குரு சுடப்பட்டதற்கும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் சுடப்பட்டதற்கும் ஒரே ஒரு காரணம் தான் உண்டு இருவரும் அரசின் துரோகத்தனங்களுக்கு துணைபோகவில்லை என்பதே பிரதானமாகும்.
    பிரதம குரு சுடப்பட்ட அன்று யாழ்பாணத்திற்கு ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துலிய ரத்தினதேரர் உட்பட ஒரு சில பௌத்த பிக்குகள் வந்திருந்ததுடன் இந்துக்குருமார்களை அவர்களது அலுவலகத்திpல் சந்தித்து கலந்துரையாடினர்.
    இதன்போது இந்துக்குருமார்களையும் பௌத்தபிக்குகளையும் இணைத்து புதிய பல திட்டங்களை மேற்கொள்வதற்கும் அனைவரையும் இணைத்து இந்து பௌத்த சமயங்களை ஒன்றாக்குவதற்கு ஜனதிபதியின் ஆசி கிடைத்திருப்பதாக ரத்திணதேரர் நயவஞ்சமாக பேசியுள்ளார்.
    ஆனால் குருமார் இதற்கு இணங்கவில்லை என்றும் இதன்போது இருதரப்பினருக்கும் இடையில் யாருடைய மதம் பெரியது என வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் ரத்திணதேரரின் சொற்பொழிவுடன் இருதரப்பினருக்கும் இடையில் மீண்டும் சமாதானம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்க ஒன்று இதனாலேயே இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவினரால் நயவஞ்சமாக பிரதம குரு கொள்ளை என்ற போர்வையில் சுடப்பட்டார்.
    சுடப்பட்ட சில மணிநேரத்திலேயே அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட நிலையில் மரணமடைந்தார் ஆனால் இதனை இராணுவப்புலானாய்வுப்பிரிவினர் வெளியில் தெரிவிக்ககூடாது என்று வைத்தியர்களுக்கு தெரிவித்ததுடன் சிகிச்சையளிக்கப்படுவதாகவும் பிரதம குரு உயிருடன் இருப்பதாகவும் தெரிவிக்கும் படி கூறியிருந்தனர் என பிரதம குருவின் உறவினர் ஒருவர் எமக்கு தெரிவித்திருந்தார்.
    இதற்கு மிக முக்கியமான காரணம் யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்கே அப்போது யாழ்ப்பாணத்தில் இல்லை அவருக்கு கிடைத்த விருதுக்கான பாராட்டு வைபவம் யாழ்ப்பாணத்திற்கு வெளியே நடைபெற்றதால் அவர் வரும் வரையே இக்கொலை சம்பவம் வெளியே தெரியாமல் மறைக்கபட்டதுடன் அவர் வந்து யாழ்ப்பாணத்தில் பத்திரிகை செய்தியாளர்களை சந்தித்தபோது சங்கானை சம்பவம் தொடர்பில் தெரிவிக்கும் போது இராணுவத்தினருக்கு கஞ்சா கொடுத்துவிட்டு முன்னாள போராளிகள் சிலரே இராணுவத்தினரின் துப்பாக்கிகளை வாங்கி சென்று கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர்களே இதனை செய்ததாகவும் தெரிவித்ததுடன் அவர்கள் இருவரும் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரும் கைதுசெய்யபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
    அன்று மாலையே பிரதம குரு சிகிச்சை பலனின்றி இறந்து போனதாக வைத்தியசாலை வட்டாரங்கள் அறிவித்தன அதேபோல் வலிகாமம் பிரதிக்கல்விப்பணிப்பாளராகவிருந்த ப.விக்கினேஸ்வரன் அண்மையில் வடமாகாண கல்விப்பணிப்பாளராக நியமிக்கப்ட்டதைத் தொடர்ந்து அங்கு சில காலம் கல்விப்பணிப்பாளர் இல்லாமல் இயங்கும் நிலைகாணப்பட்டது இதன்போது பிரதிக்கல்விப்பணிப்பாளரான இவருக்கும் இராணுவத்தினருக்கும் இவருக்கும் இடையில் ஏற்பட்ட சில தர்க்கரீதியான நிலைகளே இவரது கொலைக்கு காரணமெனத் தெரிவிக்கபடுகின்றது.
    இதற்கும் பயன்படுத்தபட்ட ஆயுதம் கொளை என்றபோர்வை அதிலும் குறிப்பாக மகளின் காதிலிருந்த தோடு ஒன்றை கழற்றமுயன்றதாகவும் பின்னர் அருகிலிருந்த தந்தையார் சுடப்பட்டு கொலைசெய்யப்படார்களையும் அவர்கள் எடுத்துக்கொண்டு சென்றனர்.
    இதெல்லாம் ஒரு புறம் இருக்க யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அண்மையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் விடுதலைசெய்யபட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய வகையில் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தபடவில்லையென தெரிவித்ததுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வரும் கொள்ளைச்சம்வங்களை குறித்து தனது மனககவலையை தெரிவித்திருந்தார்.
    இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது தற்போது நடைபெறும் குற்றச்செயல்கள் யாவும் வேலையில்லாமல் இருக்கும் முன்னாள்போராளிகளே மேற்கொண்டுவருகின்றனர் என்று அரச அதிபர் தெரிவித்திருப்பதுடன் யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி முன்னாள் போராளிகளை சங்கானை சம்பவத்துடன் தொடர்புபடுத்தியிருப்பதும் முன்னாள் போராளிகளை மீண்டும் கைது செய்வதுடன் அவர்களில் ஒரு சிலரை கொள்ளை என்ற போர்வையில் கொலை செய்யவும் சிலரை அவற்றுடன் தொடர்புபடுத்தி கைது செய்யவும் இராணுவம் திட்டம வகுத்துள்ளது.

    அதேபோல் இராணுவம் மற்றும் அரசின் நடவடிக்கைகளுக்குஎதிரானவர்களையும் அதற்கு ஒத்துழைப்பு வங்காதவர்களையும் இவ்வாறே போட்டுத்தள்ள இராணுவப்புலனாய்வுப்பிரிவின் விசேட பிரிவினர் திட்டங்களை வகுத்துள்ளனர்.
    இதே போல முக்கியமான ஒரு சில தமிழ் வர்த்தகர்களையும் சுட்டுதள்ளுவதற்கு இத்திட்டத்தினுள்ளே இராணுவத்தினர் அவர்களின் பெயர்களையும் உள்ளடக்கியிருப்பதாக இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக வர்த்தகர் ஒருவர் எமக்கு தெரிவித்துள்ளார்.
    ஓன்று மட்டும் எமக்கு தெரிகின்றது எமது வளங்களையும் சொத்துக்களையும் சிங்கள அரசு அழிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதோடு எமது தனித்துவங்களும் கலாச்சாரங்களையும் அழிக்கும் பனிப்போர் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.